இன்றைய நவீன உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளையும் அலங்கரிக்கிறது ஸ்மார்ட் போன்.
தற்போது 80 சதவீத மக்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அவை தொலைதொடர்புக்கு மட்டுமல்லாது, பொழுது போக்குக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெஸ்ஜேஞ்சர் ஆகியவை நமது தலையை நிமிர்த்தவிடாமல் வைக்கிறது.
இதனால் ஆபத்துகள் அதிகம் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் ஸ்மார்ட் போனால் ஈர்க்கப்பட்டு உயிரை விட்டவர்கள் ஏராளம்.
கடந்த 2011ஆம் ஆண்டு மட்டும் ஸ்மார்ட் போன் உபயோகித்து 1,152 பேர் விபத்துகளில் சிக்கியுள்ளனர் என்ற அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக சீனா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதாவது நீங்க ஸ்மார்ட் போன்களை பார்த்து கொண்டு சாலையில் செல்வீர்கள் என்றால் அவர்களுக்கு தனி சாலையும், மற்றபடி சாலை விதிகளை மதிப்பவர்களுக்கு வேறு சாலையும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த சாலைகளில் ஸ்மார்ட் போன் படங்களும், சில அறிவிப்புகளும் எழுதப்படுள்ளது. இதன் மூலம் ஆவது ஸ்மார்ட் போன் பயன்படுத்துபர்களை திருத்த சீனா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.