பெங்களூரில் நாட்டின் முதல் எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்
mutur news
3:48 AM
0
பெங்களூரில் நாட்டின் முதல் எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்
பெங்களூரு: பெங்களூர் நகரில் இந்தியாவிலேயே
முதல் எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பெங்களூரு
மாநகர பேருந்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு முறை முழுமையாக சார்ஜ்
செய்தால் 250 கி.மீ வரை ஓடும். இந்த பேருந்தின் பேட்டரியை
முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணிநேரம் ஆகும். தற்போதைய நிலையில் இந்த
பேருந்தை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட் பெங்களூருவின் மெஜஸ்டிக் பகுதியில்
மட்டுமே உள்ளது. இந்த பேருந்தின் மதிப்பு ரூ.2.7 கோடியாகும்.
தற்போது இந்த பேருந்து தற்போது பெங்களூருவில் மெஜஸ்டிக் பகுதியிலிருந்து கடுகோடி
வரையில் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதன் பயணக்கட்டணமாக ரூ.80 வசூலிக்கப்படுகிறது. அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற எலெக்ட்ரிக் பேருந்துகள்
சுமார் 5 ஆயிரம் இயக்கப்பட்டு வருவது கவனத்திற்குரியது